பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுக் கொண்டே உள்ளன.யாழ்ப்பாணத்தின் பல்வேறு பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 37 இற்கும் அதிகமானவர்கள். சந்தேகத்தின் பெயரில் இதுவரை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் இவை தொடர்பான விபரங்கள் இன்னமும் உத்தியோக பூர்வமாக வெளியாகவில்லை. இதேவேளை இச்சம்பவங்கள் தொடர்பாக 20 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment