இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை பெற்றுக்கொடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக, இலங்கை அரசு ஸவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலய, தூதுவர் அஹமட் ஜவாட்டை நாட்டுக்கு அழைத்தது. என்றாலும் ஸவூதி அராபியாவுக்கான புதிய தூதுவர் நியமிக்கப்படுவார் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை அரசு ரிஸானா நபீக்கை விடுதலை செய்யுமாறு பலவாறு கேட்டபோதும், ஸவூதி அரசாங்கம் அதற்கு சரியான முறையில் பதிலளிக்காமையினால் அந்நாட்டு தூதுவரை இலங்கை அரசு அழைத்தது வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்தாலும், தூதுவர் அஹமட் ஜவாட்டின் பதவிக் காலம் டிசம்பர் மாத்த்துடன் முடிவடைந்த்த்னாலேயே அவர் அழைக்கப்பட்டார் என்று வேறு சில செய்திகள் அறிவிக்கின்றன.
(கலைமகன் பைரூஸ்)

No comments:
Post a Comment