Sunday, January 13, 2013
ஊழல் மலிந்த நாடு அமெரிக்கா: ஜாக்கிசான் அதிரடி புகார்!
சமீப காலமாக அமெரிக்க பத்திரிகைகள் சீனாவையும், அதன் தலைவர்களையும் இகழ்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. சீனாவில் ஊழல் மலிந்து விட்டது. அந்த நாட்டின் பிரதமர் வென்ஜியாபாவோ உள்ளிட்ட தலைவர்கள் ஊழல் மூலம் சொத்துக்களை குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நடிகர் ஜாக்கிசானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர் சீனாவில் உள்ள ஹாங்காங்கை சேர்ந்தவர். அவர் சீனாவின் போனிஸ் டி.வி.க்கு அளித்த பேட்டியில் உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான். சீனா அல்ல. இங்கும் ஊழல் பிரச்சினை உள்ளது. அதை ஏற்று கொள்கிறேன்.
அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவில் குறைவுதான் என்றார். மேலும் அவர் கூறும்போது, சீனர்கள் தங்களை மட்டுமே விமர்சனம் செய்வார்களே தவிர வெளிநாட்டினரை அல்ல. அந்த வகையில் எங்கள் நாடு மிக சிறந்தது என்றும் அவர் கூறினார்.
Labels:
world
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment