Saturday, January 12, 2013

கிணற்றிருந்து பெண்ணின் சடலம் மீட்பு- யாழ்.பொலிஸார் தெரிவிப்பு-படங்கள் இணைப்பு

யாழ்.மத்தியூஸ் வீயிலுள்ள பாழைந்த கிணற்றிலிருந்து இறந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்றை யாழ்ப்பாணப் பொலிஸார் இன்று மீட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார். பொலிஸாருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார்? என இதுவரையில் அடையாளங் காணப்படவில்லை.

இதேவேளை சடலத்தை கிண்ற்றலிருந்து வெளியே எடுத்த யாழ்.பொலிஸார் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.



No comments:

Post a Comment