Monday, March 4, 2013

நவநீதம் பிள்ளையின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கின்றது ஜேர்மன்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையின் செயல்பாடுகள் தொடர்பாக ஜேர்மன் கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரு சில தரப்பினரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் நவதநீதம் பிள்ளை செயல்பட்டு வருவதாகவும் அவரது நடவடிக்கைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாதெனவும் ஜெனீவாவிற்கான ஜேர்மன் தூதுவர் ஹென்ரி ஷூமார்க்கர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு இணங்க இலங்கையை அசௌகரியத்தில் ஆழ்த்துவதற்காக பல்வேறு அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் கொண்டு வரப்படவுள்ள உத்தேச தீர்மானத்தை ஒரு போதும் தாம் ஆதரிக்க போவதில்லையென ஜேர்மன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்திற்கு ஆதரவு கோரி அமெரிக்கா மேற்கொள்ளும் அழுத்தங்களையும் ஜேர்மன் கண்டித்துள்ளது. சனல் 4 அலைவரிசையினால் தயாரிக்கப்பட்டுள்ள நோ பயர் ஸோன் எனும் காணொளிக்கு தேவையான காட்சிகளை கே.டி.எஸ எனப்படும் இருவரை மட்டுமே கொண்ட ஊடக அமைப்பு ஒன்றினாலேயே வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. குறித்த அமைப்பு அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு ஜேர்மன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடு;த்துள்ளதுடன் அதனை ஜேர்மன் அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

No comments:

Post a Comment