Sunday, March 17, 2013

சத்தியத்தைக் கண்களால் காண மே மாதம் இலங்கை வருகிறார் நவநீதன்பிள்ளை!

சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு வர முடிவுசெய்துள்ளதாக ஜெனீவாவிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.

இதற்கு முன்னர் இருமுறை பிற்போடப்பட்ட இந்தச் சுற்றுலா இம்முறை, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை செயல்ரீதியாக்குவதற்குத் தேவையான தொழிநுட்ப உதவிகள் பற்றி இலங்கை அரசுடன் கலந்தாலோசிப்பதற்காக மேற்கொள்ளப்படவுள்ளதாக நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்நாட்டுக்கு வருகை தந்து, இலங்கைக்கு எதிராக பலம்மிக்க நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களின் யதார்த்தநிலை என தன் கண்களால் பார்க்குமாறு இலங்கை அரசாங்கம் சென்ற வருடம் நவநீதம்பிள்ளைக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

No comments:

Post a Comment