Wednesday, October 31, 2012

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட கந்தளாய்க் குளம்!

இலங்கையில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றான கந்தளாய் குளத்தில் இரத்தினக்கல் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கந்தளாய் குளத்தில் பலர் தற்போதும் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நிமல் பண்டார தெரிவித்தார்.

அதனால் குறித்த பகுதிக்கு அதிக பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment