Monday, December 31, 2012

பரந்தனில் பா.உ சிறீதரனை விரட்டி விரட்டி அடித்த பொதுமக்கள்!

கிளிநொச்சி பரந்தனில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தமிழ் மக்கள் திட்டியதுடன் முகத்தில் காறித்துப்பி ஒட ஓட கலைத்துள்ளனர் இன்று காலையில் ஏ9 வீதியில் மோட்டர்சைக்கிள் பாயணித்துக் கொண்டு இருந்தவர்களை பொலிசார் மறிக்க நிற்காமல் சென்றதால் பொலிசிறகும் இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு இறுதியில் சமாதானமாக பேசி சென்றனர் இரு இளைஞரும் விடை பெற்று சென்றனர்.

ஏ9 வீதியால் பயணித்த இவர்களை வீதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைமறிக்க நிற்காது சென்றதால் பொலிஸ் அதிகாரிகளும் இப்பகுதி பொதுமக்களும் இணைந்து சுற்றிவளைத்து இளைஞர்களை பிடித்தது விசாரணையை மேற்கொண்டனர் விசாரணை முடிவில் இரு இளைஞர்களும் தாம் இவ்வாறு நிற்காது ஓடியது தவறு என மன்னிப்பு கேட்டதால் பெலிஸ் அதிகாரியும் பொதுமக்களும் இணைநது இவர்களை மன்னித்து விடுதலை செய்துள்ளனர்.

விடுதலையின் போது சம்பவ பகுதியால் பயணம் செய்த பா.உ சிறீதரன் வந்து இந்த பகுதி பெலிஸ் பொறுப்பதிகாரி தனக்கு தெரிந்தவர் நான் தான் கதைத்து உங்களை விடுதலை செயதன் என்று கூறிக்கொண்டடு நாம் எல்லோரும் ஒன்றாக நின்று படம் எடுக்கலாம் என்று அளைக்க இதனால் கோபம் அடைந்த மக்கள் உங்களுக்கு அரசியல் செய்ய நாங்களா கிடைத்தோம் நீங்கள் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போகலாம் என குறிப்பிட்டதுடன்.

இந்த இரண்டு இளைஞர்களும் சிறீதரனை பார்த்து நாம் செய்தது பிளைதான் என மன்னிப்பு கேட்டோம் பொலிசிடம் அவரடகளும் மன்னித்து எங்களை விடுதலை செய்து விட்டர் ஏன் நீங்கள் அதற்குள் வருகிறீர்கள் எனக்கூற இதற்கிடையில் சிறீதரன் இல்லை இல்லை நான் தான் பேசி உங்களை விடுதலை செய்தேன் என குறிப்பிட சிறிதரனுக்கும் மக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட இறுதியில் இவர்கள் சிறீதரனுடைய முகத்தி்ல் காறி துப்பிவிட்டு இனி எமது வாழ்க்கையை குழப்பாது நீங்கள் உங்களுடைய பாதையில் செல்லுங்கள் எங்களுடைய பிரசினையில் தலை போடவேண்டாம் எமது வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் எனகுறிப்பிட்டார்.

மேலும் உங்களுடைய இணைய செய்திக்காகவும், ஏயைணய இணையத்தை அலங்கரிக்க தேவைப்படும் செய்திக்காக எங்களை நீங்கள் விற்பனைப்பொருளாக மாற்ற வேண்டாம் என தெரிவித்து அனுப்பியுள்ளனர்

No comments:

Post a Comment