Saturday, January 26, 2013

15 வயதான தனது பெறாமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 40 வயதுச் சித்தப்பா

15 வயதான தனது பெறாமகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த 40 வயதுடைய சித்தப்பாவிற்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடென்றை பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சி வட்டகச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பாதிக்க சிறுமியின் பெற்றோர் கடந்த 23ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இம்முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்தனர். இதன்போது தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்டுகின்றது.
மேலும் தொடர்ச்சியாகவும் இந்தச் செயலை அவர் மேற்கொண்டு வந்துள்ளதும் தெரியவருகின்றது..

No comments:

Post a Comment