நாடு முழுவதிலும் உள்ள 38 இலட்சம் பேருக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்- இவர்களிலேயே 29 இலட்சம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை- 44 இலட்சம் வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஓல்கோட் மாவத்தையிலுள்ள கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்-
வாகன விபத்துக்களை தடுக்கவும் வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறி முறையற்ற விதத்தில் வாகனங்களை செலுத்துவதை தடுக்கும் வகையிலுமே போக்குவரத்து பொலிஸார் 29 இலட்சம் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலை நேர்ந்தது.
வாகன சாரதிகள்- பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகிய மூன்று தரப்பினர்களின் பொறுப்பற்ற தன்மையும்இ கவனயீனமுமே தொடர் விபத்துகளுக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
எனினும் அந்த வாகனங்களை செலுத்தும் சாரதிகளில் சுமார் 38 இலட்சம் பேருக்கே வாகன அனுமதிப் பத்திரங்கள் காணப் படுகின்றன. இதில் ஒரு வாகனம் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வாகனங்கள் காணப்படும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் சுமார் 25000 ஆகும்.
இதன் பிரகாரம் வாகனம் செலுத்தும் சாரதிகளில் சுமார் ஆறு இலட்சம் பேருக்கு சட்டரீதியான சாரதி அனுமதிப் பத்திரம் இல்லையென தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் வீதி விபத் துக்களுடன் தொடர்புடைய சுமார் 600 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தும் அதிகமானவர்கள் இளைஞர்கள் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்தியடையாத பாடசாலை மாணவர்கள் கூட சாரதி அனுமதிப் பத்திரமின்றி நவீன வாகனங்களை செலுத்திய நிலையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் செல்வந் தர்களின் பிள்ளைகளாகவும் உயர் பதவி வகிப்போரின் பிள்ளைகளாகவும் இனங் காணப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்க கோன் அவர்களின் பிரதான எதிர்பார்ப்பாக அமைவது இந்த ஆண்டிலே வீதி விபத்துகளை 20 வீதத்தால் குறைப்பதாகும். அதற்கு தேவையான சட்ட திட்டங்கள்இ செயலமர்வுகள்இ பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்இ பொது மக்களுக்கான அறி வுறுத்தல்கள் வழங்குதல் என்பன தொடர் பாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் வாகன போக்குவரத்து பிரிவு பொலி ஸாருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்
No comments:
Post a Comment