2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா அறிவித்துள்ளார். இன்று லண்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இதனை தெரிவித்துள்ளார்.2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையிலேயே தமது முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய அமைப்பின் 23ஆவது மாநாடு, இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 15 திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment