மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் மீராவோடை ஆற்றில் குதித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அவருடைய இரு பிள்ளைகளான இலக்சினி (வயது 07) மற்றும் மீனுஜா (வயது 03) ஆகிய இருவரும் பலியாகியுள்ளதுடன், தாய் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் கணவன் மனைவிக்கிடையிலான குடும்ப பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகிறது. பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மீராவோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Monday, May 27, 2013
குடும்ப பிரச்சனையால் இரு பிள்ளைகளுடனும் ஆற்றில் குதித்த தாய்! பிள்ளைகள் இருவரும் பலி!
மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் மீராவோடை ஆற்றில் குதித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அவருடைய இரு பிள்ளைகளான இலக்சினி (வயது 07) மற்றும் மீனுஜா (வயது 03) ஆகிய இருவரும் பலியாகியுள்ளதுடன், தாய் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் கணவன் மனைவிக்கிடையிலான குடும்ப பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகிறது. பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மீராவோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment