Saturday, June 29, 2013

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப்பிரயோகம்!

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த லொறி யொன்றின் மீது கண்டி, தலாத்துஓயா பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இரவுநேர ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தே கத்தின் பேரில் லொறியொன்றை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளளனர். எனினும் குறித்த லொறியின் சாரதி லொறியை நிறுத்தாமல் சென்றதாகவும், அதனையடுத்து பொலிஸார் லொறிமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து லொறியை நிறுத்திவிட்டு சாரதி தப்பியோடியுள்ளதாகவும், லொறியிலிருந்த இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த லொறியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச் செல்லப்பட்ட 24 மாடுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment