பௌத்தர்களும் ஐந்து திருமணங்கள் புரியும் வண்ணம் நாட்டின் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பொது பல சேனா இயக்கம் கூறுகிறது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, அந்த இயக்கத்தின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசேக்கர தேரர், ‘ஒரு நாட்டிற்குள் இருவேறு திருமணச் சட்டங்கள் இருக்க முடியாது’ என்று குறிப்பிட்டார்.
முஸ்லிம்களுக்கு இரண்டு, மூன்று திருமணங்கள் புரிய முடியுமென்றால் இந்த நாட்டின் சட்டம் மறுசீரமைக்கப்பட்டு, பௌத்தர்களும் அந்தளவு திருமணம் செய்துகொள்ள சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்ற தேரர்,
ஒரு நாட்டிற்குள் ஒரு சட்டமே இருக்க முடியும். அதனால் அதற்காக தங்களது இயக்கம் போராட்டம் நடத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)

No comments:
Post a Comment