Tuesday, January 29, 2013

பறந்து கொண்டிருந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது 22 பேர் பலி

கஜகஸ்தான் நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பலியாகியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொக்க்ஷேடோ நகரில் இருந்து வட கஜகஸ்தான் பகுதிக்கு இன்ற காலை விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.வர்த்தக நகரமான அல்மாட்டி அருகே உள்ள கைசைல்டு என்ற கிராமத்தின் மீது பறந்துக் கொண்டிருந்த அந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த 22 பயணிகளும் இந்த விபத்தில் பலியாகி விட்டனர். மோசமான பனி மூட்டம் நிலவியதே இந்த விபத்துக்கு காரணம் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 15 பயணிகளும் 5 பணியாளர்களும் இரண்டு விமானிகளும் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment