உதயன் பத்திரிகையின் கிளைக் காரியாலயத்திற்கு அதன் பின்புறமாக வந்த முகமூடியணிந்த ஏழு பேர் கொண்ட ஒரு குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த நால்வரில் பொன்ராசா (வயது 57), பிரதீபன் (வயது -28) ஆகிய இருவரும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இந்த தாக்குதலில் பத்திரிகை ஏற்றி வந்த வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசாரும் இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment