Saturday, June 29, 2013

தனியார் பஸ் கட்டணம் ஜுலை முதலாம் திகதி அதிகரிப்படமாட்டாது - சி. பி. ரத்நாயக்க.

ஜூலையில் இடம்பெறவிருந்த தனியார் பஸ் கட்டண உயர்வு ஒத்திப் போடப்பட்டுள்ளதாகவும், இதற்கிணங்க தனியார் பஸ் கட்டணத்தை நாளை ஜுலை முதலாம் திகதி அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக, தனியார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் ஜூலை மாதத்தில் தனியார் பஸ் கட்டணங்களில் திருத்தம் ஏற்படுத்தப்படும். அந்த வகையில் இம்முறை ஜூலை முதலாம் திகதி பஸ் கட்டணத் தில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

இதற்கமைய பஸ் உரிமையாளர் சங்கத்துடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஜுலை முதலாம் திகதி பஸ் கட்டணத்தை அதிகரிப்பதில்லை என, பஸ் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்ததாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்றுத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment