Wednesday, October 31, 2012

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போடித் தொடர் ஒன்றை இந்தியாவில் நடத்த, இந்திய மத்திய உள்துறை அமைச்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடெல்கி, சென்னை, கோல்கட்டா, பெங்களூரூ, ஆமதாபாத், ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் இடம்பெறும்.

டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பமாகும் இந்த போட்டிகள் ஜனவரி மாதம் வரையில் இடம்பெறும்.

இந்த தொடரில் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் உள்ளடங்குகின்றன.

இதன் பொருட்டு பாகிஸ்தான் அணி வீரர்கள் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்தியா செல்கின்றனர்.

மும்பை தாக்குதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் தடைப்படடிருந்த கிரிக்கெட் போட்டிகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment