Wednesday, June 5, 2013

3,500 கோடி ரூபா முதலீட்டிலான சூதாட்ட விடுதிக்கு அரசாங்கம் அனுமதி!

கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் (3,500 கோடி) ரூபா முதலீட்டில் 400 அறைகள் கொண்ட லாஸ் வெகாஸ் பாணியிலான பாரிய சூதாட்ட விடுதியொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 400 அறைகளைக் கொண்ட பாரியளவிலான சூதாட்ட விடுதியானது, அவுஸ்திரேலியாவின் பிரபல சூதாட்ட முதலாளியான ஜேம்ஸ் பக்கர் என்பவரால் முதலீடு செய்யப்படவுள்ளதாகவும், இந்த திட்டத்துக்கு 10 வருட வரிச் சலுகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன இந்த அறிவிப்பை நேற்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த முதலீட்டினால் 2,600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் வேறு பல நன்மைகளும் கிடைக்குமெனவும், இதனை ஓர் சிறந்த முதலீடாக கருத வேண்டுமெனவும், இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் எனவும், பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment