Saturday, June 29, 2013

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதாம். - சுரேஷ்

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கலந்துகொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று மாலை இடம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைபின் கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித் துள்ளார்.

அத்துடன் இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர் எனவும், ஆனந்த சங்கரி கலந்துகொள்ளவில்லை எனவும், இருந்தபோதிலும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது முழு ஆதரவினை வழங்குவதாகத் தெரிவித்தார் என, சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமையவே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment