புலிகளின் இராணுவப் பிரிவின் தலைவர் ஒருவர் தெரிவித்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுவிஸ் வங்கியொன்றில் புலிகள் வைப்பு செய்துள்ள ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு புலனாய்வு சேவைகளின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கனடா மற்றும் ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பினர் சேகரித்த நிதி மற்றும் சொத்துக்களே இந்த சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் குறித்த இந்த வங்கியின் பெயரையும் இலங்கை அரசாங்கம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இந்த விடயம் தொடர்பில் சுவிஸ் புலனாய்வு அமைப்பின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக உயர்மட்டத்தரப்பு தகவல்கள் தெரிவிப்பதுடன் கொழும்பில் புலிகளுக்கு சொந்தமாக இருந்த 90 மில்லியன் ரூபா பெறுமதியான வங்கி கணக்குகள் இரண்டு ஏற்கனவே முடக்கப்பட்டடை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment