இன்றைய தினம் கோப்பாய் பிரதேசசெயலகத்தில் பிரதேச செயலர் பிரதீபன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும்சேவையின் 1ம் நாள் நிறைவில் 500ற்கும் மேற்பட்ட மக்கள் புதிய அடையாள அட்டைகளை பெறுவதற்கு விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து பிதேசங்களிலும் இது நடைபெறவுள்ளது.
2011ம் ஆண்டின் ஆட்பதிவுத்திணைக்களத்தின் பதிவுகளின்படி வடமாகாணத்தில் 1லட்சத்தி 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களாக உள்ளனர். ஏனவே இவற்றைக்கருத்திற்கொண்டு இந்த நடமாடும் சேவையானது வடமாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
No comments:
Post a Comment