Monday, September 23, 2013

இலங்கையில் முதல் தடவையாக பஸ்களில் பெண் நடத்துநர்கள் நியமிப்பு!

இலங்கையில் முதல் தடவையாக பஸ்களில் பெண்களை நடத்துநர்களாக நியமிக்க வட மத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த வேலையை ஏற்க முன்வந்த 48 வயதான ஆர்.சிரிமாவதி எனும் பெண் ஹொறவ பொத்தனை வஹல்கட பஸ்ஸில் நடத்துநராக நியமிக்கப் பட்டுள்ளார்.

சிரிமாவதி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பார்வையிட்ட போக்குவரத்து அதிகார சபை இவருக்கு வாய்ப்பு அளித்து நடத்துநர் அனுமதிப்பத்திரத்தையும் வழங்கியு ள்ளது.

வடமத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் எச்.பி.சீமசிங்கவின் அங்கிகார த்துடன் பெண்களை பஸ் நடத்துநராக நியமனம் செய்தலை தொடங்கியுள்ளதாக வட மத்திய போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment