Tuesday, September 24, 2013

ஜனநாயக உரிமையை பாதுகாப்பது, வடக்கு மக்களின்வரப்பிரசாதம் ! .


ஜனநாயக உரிமையை பாதுகாப்பது, வடக்கு மக்களின் வரப்பிரசாதமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
3 தசாப்தகாலமாக நிலவிய யுத்த சூழல் காரணமாக பாரிய பாதிப்புக்களை மக்கள் எதிர்கொண்டிருந்தனர்.

என்றும் இந்நிலையில் ஜனநாயக ரீதியான தேர்தலினூடாக, தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களிப்பில் ஈடுபட்டதாகவும், அது சமூகத்தில் காணப்படுகின்ற ஜனநாயகத்திற்கான எடுத்துக்காட்டை பிரதிபலிப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment