எகிப்து நாட்டிலுள்ள சினாய் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வந்தார்கள். இதனை அடுத்து தலைநகர் கெய்ரோ அருகேயுள்ள நச்செர் நகரில் ராணுவத்தினர் வேட்டை நடத்தி 12 தீவிரவாதிகளை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவருகிறது.
இந்த தகவலை வெளியிட்ட உள்துறை அமைச்சகம் பிடிபட்ட
இந்த 12 பேரும் எகிப்து நாட்டிலும், வெளிநாடுகளிலும் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களில் ஒருவன் துனிசியாவையும், மற்றொருவன் லிபியாவையும் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளது

 
No comments:
Post a Comment