Monday, June 3, 2013

என்னைத் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள்....! - ஷிராணி பண்டாரநாயக்க

இலஞ்ச ஆணைக்குழுவுக்கு தனக்கெதிராக மனு வழங்கி செய்வது என்னவென்றால், துரத்தித் துரத்தி பழிவாங்குவதே அன்றி வேறில்லை என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா குறிப்பிடுகிறார். சிங்கள வாராந்தரப் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆயினும்,அவர்களில் எவர்மீதும் தனக்குக் கோபமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'தற்போது எனது பிரதம நீதியரசர் பதவியை இல்லாமற் செய்திருக்கிறார்கள். ஓய்வூதியத்தை இல்லாமற் செய்திருக்கிறார்கள். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் நிறுத்தியிருக்கிறார்கள். உண்மையில் நான் நினைப்பது என்னவென்றால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன் என்னை நிறுத்தி என்னை (எதற்காகவோ) பழிவாங்குகிறார்கள். அங்கே கோபமும் குரோதமும்தான் இருக்கின்றது. எல்லாவற்றையும் இழந்துவிடச் செய்த ஒருவரை மீண்டும் மீண்டும் அடித்துத் துன்புறுத்துவதாகவே நான் அதனைக் கருதுகின்றேன். ஒவ்வொரு ஆண்டும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அறிக்கையை நான் வழங்கியிருக்கிறேன். தேவையான அனைத்தையும் நிறைவேற்றியிருப்பதைத் தெரிந்துகொண்டும் பழிவாங்கும் நோக்கோடு செயற்படுகிறார்கள். ஆயினும் அவர்களில் எனக்குக் கோபமில்லை.'

'கழிந்துபோன காலகட்டத்தில் என்னைப் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளை எடுத்துநோக்கினால், நான் பெருந்தொகையான சொத்துக்களை நினையாப்பிரகாரம் ஒன்றுதிரட்டியிருப்பதாகவே என்மேலுள்ள புகாராக இருந்ததைக் காணலாம். இந்நாட்டில் அதிக சொத்துக்களுக்கு உரிமைக்காரியாக என்னை வர்ணித்திருந்தார்கள். இந்நாட்டின் அதிக பணம் படைத்தவர்கள் வரிசையில் ஒருபோதும் நான் அடங்குவதில்லை. நானும் பிரதீப் இருவரும் 32 ஆண்டுகளாக தொழில் புரிந்தோம். பிரதீப் 1979 இலிருந்து 2009 வரை அதிக தனியார் நிறுவனங்களைக் கட்டியெழுப்பினார். அந்நிறுவனங்கள் அவருக்கு கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கியது. நான் நீதியான முறையில், சட்டரீதியாக உழைத்த பணத்தை சேமிப்பது தவறு என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அது தவறு என நான் ஏற்றுக்கொள்வதுமில்லை.'

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment