Tuesday, June 25, 2013

கோபுர திருத்தப் பணியில் ஈடுபட்ட மூவர் மரம் முறிந்து விழுந்ததில் படுகாயம்!

யாழ். மாதகல், நுணாச முருகன் ஆலய 30 அடி உயரமுடைய கோபுர திருத்தப் பணியினை மேற்கொண்டிருந்தவேளை, சாரம் போடப்பட்டிருந்த மரம் முறிந்ததில் ஒரே வரிசையில் நின்ற மூன்று பேர் இன்று மதியம் கோபுர உச்சியில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளனர்.

இந்தச்சம்பவம் இன்று(25.06.2013) மதியம் நடைபெற்றுள்ளது.

விபத்து சம்பவத்தில் வடலியடைப்பு பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பொன்னையா சற்குணம் (வயது 54) என்பவர் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலும், பசுபதி சத்தியகுமார் (43) என்பவர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் மேலும் ஒருவர் சிறு காயத்துடன் யாழ் போதனாலைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment