Tuesday, June 25, 2013

ரயிலின் மிதிபலகையில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் லொறியுடன் மோதுண்டு விபத்து! இருவர் பலி!

மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த ரயிலின் மிதிபலகையில் பயணித்துக்கொண்டிருந்த போது, அங்குலானை பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய ரக லொறியுடன் மோதுண்டு உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் வெலிபென்ன பகுதியைச் சேர்ந்தவர் எனவும், உயிரிழந்த மற்றைய நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுபோவில மற்றும் லுணாவ வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment