Tuesday, September 24, 2013

மிதி வெடியில் சிக்கியது உழவு இயந்திரம்; ஒருவர் பலியாகி இருவர் காயம்

முகமாலையில் உழவு இயந்திரமொன்று இன்று செவ்வாய் க்கிழமை மிதி வெடியில் சிக்கியதில் ஒருவர் பலியாகிய துடன் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பளை பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அல்லிப் பளையைச் சேர்ந்த 17 வயதான துரைசிங்கம் நிரோஜன் மற்றும் புலோப்பளை கிழக்கை சேர்ந்த 17 வயதான சி.குகராசா ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த பளை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment