Friday, May 31, 2013

ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா? சுமந்திரன் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டாராம் மாவை!

ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பிரச்சினைக்கான தீர்வு நகல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நகலில் தீர்வானது ஒற்றையாட்சியின் கீழ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகலினை ஏற்றுக்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சுமந்திரன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் சுமந்திரனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அது அவருடைய தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை அவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கையின் இறையாண்மையையும் அதன் ஒருமைப்பாட்டையும் காப்பேன் என சத்தியப்பிரமானம் செய்து , பாராளுமன்ற வரப்பிரசாதங்களையும் பின்கதவால் கிடைக்கும் சலுகைகளையும் அனுபவித்து வருகின்றார் மாவை என்பது யாவரும் அறிந்த விடயம்.


No comments:

Post a Comment