Sunday, April 28, 2013

'என்னுடன் விளையாட வா' என அழைத்து சென்று 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது!

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவரை 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளான். சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனை கைது செய்து நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இன்று அடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார் பட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகளான 3 வயது சிறுமி ஒருவர், நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அங்கு முத்துராஜ் என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுமுறை என்பதால் குறித்த சிறுவன் மடடும் வீட்டில் தனியாக இருந்தான். அவனது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது சிறுமியை 'என்னுடன் விளையாட வா' என வீட்டிற்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனதையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவளை அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது அவர்களது பக்கத்து வீடான முருகன் என்பவரின் வீட்டில் உள்ளே இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.அப்போது அங்கு முருகனின் மகனான முத்துராஜ் (வயது 14), சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவனிடமிருந்து சிறுமியை மீட்டனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஊத்துமலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி வழக்குப்பதிந்து முத்துராஜை கைது செய்து நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இன்று அடைத்தனர்.

No comments:

Post a Comment