முஸ்லிம் இயக்க பிரதிநிதிகளையும் சமூக ஆர்வலர்களையும் கொண்ட அரசியல் கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா- ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் உலமாக்கள்- முஸ்லிம் இயக்கப் பிரதிநிதிகள்- வர்த்தகர்கள்- கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனை சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
எழுபத்தைந்துக்கும் அதிகமான முக்கியஸ்தர்களைக் கொண்ட இந்தச் சபை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான குறுகிய கால இடைக்கால- நீண்டகால திட்டங்களை வகுத்து செயல்பட உள்ளதோடு நாட்டில் சமாதான- சகவாழ்வுக்காகவும் பாடுபடும்.
No comments:
Post a Comment