Sunday, March 31, 2013

மதவாதக் காவிகளும் மிதவாதத் தொப்பிகளும் (கவிதை)

தீக்குச்சி
தீண்டி
கதிரவன்தான்
கரையுமோ?

பூனைமோதி

யானைதான்

வீழுமோ?



பூமியழுது
வானம்தான்
நனையுமோ?

வானம் அழுதால்
பூமிதான்
தாங்குமோ?

காவிகள்
இனவாதக்
கத்திபிடிக்கலாம்!

அதற்கு
அரசு எனும்
அரக்கன்
துணையும் நிற்கலாம்!

பன்றிகள் சேர்ந்து
கூட்டமைக்கலாம்!

இனத்தையே
அடகுவைத்து
பரதேசிகள்
பதவியெனும்
எலும்பு
கடிக்கலாம்!

காற்று
அடிக்கலாம்!
புயல்
அடிக்கலாம்!!

ஆனால்,
கடலலைகள்
ஓய்வதில்லையே...!

- எம்.பீ.அன்வர்

No comments:

Post a Comment