யாழ். நகரின் பிரபல தனியார் பாடாசலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் மீது அப்பாடசாலையின் ஆசிரியர் தாக்கியதனால் மாணவரின் செவிப்பறை உடைந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.தனியார் பாடாசலையில் ஆறாம் ஆண்டில் கல்வி பயிலும் கோண்டாவிலைச் சேர்ந்த மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையின் 11 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை குறித்த மாணவன் தவணைப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு பி.ப. 1.00 மணியளவில் பாடசாலையில் தரித்திருந்த வேறு மாணவர்களுடன் குறுப்வேக் நடைபெற்றுக்கொண்டிருந்த போது எழுந்து நின்றுள்ளான். அங்கு வந்த குறித்த ஆசிரியர் கையால் மாணவரின் கன்னத்தில் தாக்கியதாகவும் இதன் காரணமாகவே மாணவனது செவிப்பறை உடைந்தாகத் தெரியவருகின்றது.
இந்தச் சம்பவம் குறித்து யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு குறித்த பாடசாலையின் அதிபரும் கொழும்பு சென்றிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதாகவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment