Friday, May 3, 2013

தீயசக்திகளை பலப்படுத்த கனடா முயற்சிக்கின்றது - கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்!

கனேடிய அரசாங்கம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக அச்சுறுத்துவதன் மூலம் தீயசக்திகளை பலப்படுதற்கு முயற்சிப்பதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வகிஸ்வரா குற்றம் சுமத்தியுள்ளார்.

2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை யார் நடத்துவது என்பது தொடர்பாக நாடுகளின் தலைவர்கள் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து சில தரப்பினர் கருத்துத் தெரிவிப்பது முன்னெப்போதும் நடைபெறாத அதிர்ச்சி தரும் விடயமாகும் எனவும், பொதுநலவாயத்தின் அங்கத்துவ நாடுகள் இறைமையுள்ள நாடுகளின் சமத்துவம், புறவயத்தன்மை, பரஸ்பர மரியாதை, ஆகிய கோட்பாடுகளை நிலைநிறுத்தும் என இலங்கை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment