Tuesday, April 30, 2013

சூரிய மின்சாரம் மூலம் மீன்களை உலர்த்தும் நவீன சாதனம் அறிமுகம்!

nathandiya-1
சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தி மீன்களை உலர்த்தி உயர் ரக கருவாடு தயாரிக்கும் கூடு வடிவிலான புதிய சாதனம் ஒன்று புத்தளம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சினhல் நாத்தண்டியில் உள்ள மூதுகட்டுவ என்ற மீனவக் கிராமத்தில் இந்த சு+ரிய சக்தி மின்கூடு ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

மண் மற்றும் தூசி கலக்காத தூய்மையான நிலையில் நாளென்றுக்கு 120 கிலோ மீன்வகைகளை உலர்த்தக்கூடியதாக இந்தக் கூடு உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் பராமரிப்புச் செலவுகள் மிகவும் குறைவனதோடு கடற்கரைப் பிரதேசங்களில் மிக இலகுவாக இந்தக் கூடுகளை நிறுவ முடியும்.


இதே போன்ற கூடுகள் மீன்வளம் அதிகளவில் உள்ள நீர்கொழும்பு – புத்தளம் - மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்பிரதேசசங்களிலும் அமைக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மூதுகட்டுவ பிரதேச மீனவர் சங்கத்தினரிடம் இதனை ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று (29) வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நாத்தண்டி பிரதேச செயலாளர் உட்பட மாகாணசபை அமைச்சர் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment